2026 மார்ச் 6ம் தேதி சனிப்பெயர்ச்சி: அதிகாரப்பூர்வ‌ அறிவிப்பு

புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாரில் உலக பிரசித்திபெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் தனி சன்னதியில் அணுக்கரக மூர்த்தியாக சனீஸ்வர பகவான் அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும். சனிப்பெயர்ச்சி நாளன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சனீஸ்வர பகவானை தரிசனம் செய்வது வழக்கம்.

இந்நிலையில் சனிப்பெயர்ச்சி விழா 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடப்பதாக பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்த நிலையில், திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவில்லை. இந்நிலையில்‌வரும் 2026ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி காலை 8:24 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பிரவேசிக்கிறார்.
இதனை நேற்று கோவில் நிர்வாகம் சார்பில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் பஞ்சாங்கம் வாசித்து, அறிவித்தனர்.