குடியரசு தினத்தையொட்டி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் ரங்கசாமி தேசியக் கொடி ஏற்றினார்

நாட்டின் 75 வது குடியரசு தினம் இன்று புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் கொண்டாடப்பட்டது. சட்டப்பேரவை வளாகத்தில் காவல்துறையினரின் மரியாதையை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி, தேசியக்கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். விழாவில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயளாலர், டிஜிபி, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்துகொண்டனர்.