நான் பணம் சம்பாதிக்க இங்க வரல… டாக்டரா இருந்தபோதே நன்றாக சம்பாதித்துவிட்டேன் – ஆவேசமடைந்ந ஆளுநர் தமிழிசை

பிரதமர் நரேந்திர மோடியுடன் மாணவர்கள் கலந்துரையாடும் “பரிக்ஷா பே சர்ச்சா 2024“- நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி புதுச்சேரி அரசு, பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் கம்பன் கலையரங்கத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் டாக்டர தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், உள்துறை மற்றும் கல்வி அமைச்சர் நமச்சிவாயம், துணை சட்டப்பேரவைத் தலைவர் ராஜவேலு உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார். இதேபோல் பல்வேறு அரசு பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் பள்ளி மாணவர்கள் பிரதமருடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதில், சேதராப்பட்டு, அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவி தீபஸ்ரீ, காணொளி வாயிலாக பாரதப் பிரதமரோடு கலந்துரையாடினார்.

நிகழ்ச்சியை தொடர்ந்து
செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மாணவர்கள் தேர்வை எதிர்கொள்வதற்கான ஆர்வமும் தைரியமும் வெற்றியும் கிடைக்கும் என்பதுதான் இந்த நிகழ்ச்சியின் தார்ப்பரியம். உண்மையில் நல்ல நிகழ்ச்சி என்று தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வாங்கியதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகவும், அதில் துணைநிலை ஆளுநர்க்கும் பங்கிருப்பதாகவ எதிர்கட்சிகள் குற்றம் சும்மத்திருப்பது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தமிழிசை சவுந்தரராஜன், குழந்தைகளுக்கு நல்லது செய்யணும்னு செய்து இருக்கிறோம். லேப்டாப் கொள்முதல் தொடர்பாக அவர்களை நேரில் கேட்க சொல்லுங்கள். பணத்தை பற்றி என்னிடம் பேசினால் எனக்கு கடும் கோபம் வரும். நான் மருத்துவராக இருந்தபோதே நன்றாக சம்பாதித்து உள்ளேன். அரசியலுக்கு நான் சம்பாதிக்க வரவில்லை. அடிப்படை ஆதாரம் இல்லாமல் என்னை குற்றம் சாட்ட வேண்டாம் என காட்டமாக தமிழிசை பதிலளித்தார்.