உடல் எடைக் குறைப்பு சிகிச்சை மேற்கொண்டபோது இளைஞர் உயிரிழந்த மருத்துவனைக்கு சீல்.! தமிழக அரசு அதிரடி

புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி நகரைச் சேர்ந்தவர் செல்வதான்(52). இவர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு ஹேமச்சந்திரன் (26) மற்றும் ஹேம்ராஜன் என்ற இரட்டை ஆண் பிள்ளைகள் உள்ளனர். இதில் மூத்த மகன் ஹேமச்சந்திரன் பிஎஸ்சி ஐடி முடித்துவிட்டு டிசைனிங் வேலை செய்து வருகிறார். ஹேமராஜன் சித்தா பர்மசிஸ்ட் வேலையில் உள்ளார். இதில் ஹேமச்சந்திரன் உடல் பருமன் காரணமாக எடையை குறைக்கவேண்டும் என்பதற்காக யுடியூப் மூலமாக மருத்துவர்களை தேடியுள்ளார். அப்போது சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையை தொடர்பு கொண்டு அங்குள்ள மருத்துவரிடம் தனது உடல் எடையை குறைப்பது குறித்து பேசியுள்ளார்.
இதையடுத்து கடந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அப்போது ஹேமச்சந்திரனுக்கு நீரிழிவு நோய் இருப்பதால் சில மருத்துவ பரிசோதனைகளை செய்தபின் அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியதாக தெரிகிறது. பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் செல்வநாதன் மருத்துவமனைக்கு சென்று, அறுவை சிகிச்சைக்கு எவ்வளவு செலவு ஆகும் என கேட்டுள்ளார். அப்போது ரூ.8 லட்சம் ஆகும் என கூறவே. ரூ.4 லட்சம் செலவில் சிகிச்சை அளிப்பதாக கூறிய மற்றொரு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு கடந்த 21ம் தேதி அறுவை சிகிச்சைக்காக ஹேமச்சந்திரன் சேர்ந்துள்ளார். பின்னர் மருத்துவ பரிசோதனை செய்து மறுநாள் 22ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சை தொடங்கிய சில மணி நேரத்தில் ஹேமச்சந்திரனின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. உடனே குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு அங்கிருந்த மருத்துவர்கள் செல்வநாதனிடம் கூறிய நிலையில், சிறிதுநேரத்தில் ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிரச்சியடைந்த செல்வநாதன் மற்றும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் தவறான சிகிச்சையால் மகன் உயிரிழந்து விட்டதாகவும், இதற்கு காரணமான அறுவை சிகிச்சை செய்த மருத்துவர். பணியாளர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்குமாறு பம்மல் டி-காவல் நிலை செல்வநாதன் உடவே புகார் அளித்தார் அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே
இந்த விவகாரம் தொடர்பாக உடல் பருமன் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் 2 இணை இயக்குனர்கள் தலைமையில் 4 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் அரசு மருத்துவ கல்லூரியில் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை மருத்துவர்களை நேரில் வரவழைத்து விசாரணையை நடத்தினர். மேலும் மருத்துவ பிரிவு தலைவர், மயக்கவியல் குடல் அறுவை சிகிச்சை தலைவர், இதயவியல் மருத்துவர்கள் உள்ளிட்டோர் விசாரணையை நடத்தினர். விசாரணை நடத்தப்பட்ட பின் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து மருத்துவ குழுவினர் தமிழக அரசிடம் புதுச்சேரி இளைஞர் ஹேமச்சந்திரனுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்த்தினர்.

இந்நிலையில் உயிரிழந்த இளைஞர் ஹேமசந்திரனுக்கு உடல் பருமன் அறுவைச் சிகிச்சை நடைபெற்ற சென்னை பம்மல் பி.பி.ஜெயின் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்வதற்கான அடிப்படை வசதிகள் இல்லை, அவசர உயிர் காக்கும் சிகிச்சை வசதிகள் இல்லாததால் அந்த மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்து உடனடியாக மூட வேண்டும் என்று விசாரணை குழுவினர் மருத்துவமனையை ஆய்வு செய்து அளித்த அறிக்கையின் அடிப்படையில், அந்த மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்து, உடனடியாக மருத்துவமனையை மூட சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவிட்டதின் அடிப்படையில் இன்று பி.பி.ஜெயின் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.