வாகன ஓட்டிகளே உஷார்… புதுச்சேரியில் மோட்டார் வாகனங்களுக்கு 3 ஆம் நபர் காப்பீடு செய்யாவிட்டால் ரூபாய் 4,000 வரை அபராதம்.!

புதுச்சேரியில் மோட்டார் வாகனங்களுக்கு 3 ஆம் நபர் காப்பீடு செய்யாவிட்டால் ரூபாய் 4,000 வரை அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி அரசின் போக்குவரத்து துறை துணை ஆணையர் குமரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சாலை போக்குவரத்து தொடர்பாக, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் அறிவுறுதலிற்கேற்ப மோட்டார் வாகனச் சட்டம் 1988 விதி எண் 146-ன் படி இந்தியாவில் உள்ள அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட அனைத்து மோட்டார் வாகனங்களும் தனது 100 சதவிகித மூன்றாம் நபர் காப்பீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று அமைச்சகம் அறிவுறுத்துகிறது.

மோட்டார் வாகனங்களின் மூன்றாம் நபர் காப்பீட்டு விவரம் VAHAN PORTAL-ல் உடனடியாக கிடைக்கிறது. எனினும் பல மோட்டார் வாகனங்கள் மூன்றாம் நபர் காப்பீடு இல்லாமல் தொடர்ந்து இயங்குகின்றன. இது சட்டத்திற்கு முரண்பாடானது.

கள அதிகாரிகள் மூன்றாம் நபர் காப்பீடு இல்லாத வாகனங்களை கண்டறிந்து மோட்டார் வாகன சட்டம், 1988, பிரிவு 196-ன் படி அபதாரங்கள் விதிக்க வேண்டும் மற்றும் வாகன உரிமையாளர்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஏற்படுத்த வேண்டும்.

அமலாக்கத்துறை அதிகாரிகள் மோட்டார் வாகன சட்டம் 1988-ன் படி, மோட்டார் வாகன காப்பீடு இல்லாத வாகனங்களை கண்டறிந்து கீழ்கண்டவாறு அபராதங்கள் விதிக்கப்படும்:

முதன்முறை குற்றத்திற்கு: ரூ 2,000 அபராதம் அல்லது மூன்று மாதம் சிறை தண்டனை அல்லது இரண்டும்.

மேற்படி குற்றம் தொடர்ந்தால்:4,000 அபராதம் அல்லது மூன்று மாதம் சிறை தண்டனை அல்லது இரண்டும்.

அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பிரிவு 196 மோட்டார் வாகனச் சட்டத்தி -ன் படி எந்த வித விலகலும் இல்லாமல் சட்டத்தை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கிப்படுகிறது. ஆகவே, பொதுமக்கள் தங்கள் வாகனங்களை மூன்றாம் நபர் காப்பீடு செய்து வாகனங்களை இயக்குமாறு வலியுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.