புதுச்சேரி முத்திரையர்பாளையம் ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆடிப்பூர ஆண்டாள் உற்சவம்

புதுச்சேரியில் பிரசித்திபெற்ற முத்திரையர்பாளையம் ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி நடைபெற்ற ஆண்டாள் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஆண்டாளை வழிபட்டு சென்றனர்.

புதுச்சேரி முத்திரையர்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு பச்சை பட்டுடுத்தி தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஆண்டாளை வழிபட்டு சென்றனர். தொடர்ந்து சுமங்கலி பெண்களுக்கு வளையல், குங்குமம், மஞ்சள் உள்ளிட்டவைகளை பிரசாதமாக வழங்கப்பட்டது.