பெரியாரை நீக்கிவிட்டு இங்கு யாரும் அரசியல் செய்ய முடியாது: சீமானுக்கு நடிகர் பார்த்திபன் பதிலடி.!

பெரியாரை நீக்கிவிட்டு இங்கு யாரும் அரசியல் செய்ய முடியாது என்றும், அதனால்தான் சீமானும் பெரியார் வைத்து கொண்டு அரசியல் செய்கிறார் என நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் இன்று புதுச்சேரி சட்டப்பேரவையில் சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த பார்த்திபன், நான் புதியதாக இயக்கும் திரைப்படத்தின் படப்படிப்பை 90 சதவீதம் புதுச்சேரியில் எடுக்க போவதாகவும், இதற்கு அரசின் சில உதவிகள் தேவைப்படுவதால் அமைச்சரை சந்தித்ததாகவும், இந்த படத்தில் புதுச்சேரியை சேர்ந்த கலைஞர்களை பயன்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகளின் கேள்விகளுக்கு பதிலளித்த பார்த்திபன், பெரியாரை நீக்கிவிட்டு இங்கு யாரும் அரசியல் செய்ய முடியாது என்றும், அதனால்தான் சீமானும் பெரியார் வைத்து கொண்டு அரசியல் செய்கிறார். எதற்கும் ஒரு எடுத்துகாட்டு தேவைப்படும் அதற்காக ஒரு பெரிய மனிதரை இலக்கு வைத்தால் தான் அதற்கு அடுத்த இடத்திற்கு வர முடியும், உதாரணத்திற்கு சிவாஜியாக வர வேண்டும் என நினைத்தால் ஜெயசங்கர் அளவிற்க்காவது வரலாம் என ஆரம்ப காலங்களில் ரஜினிகாந்த் கூறியது போல் எம்.ஜி.ஆரை மனதில் வைத்துகொண்டால் அந்த இடத்தை அடையாளம் என்பது அவர்களது (விஜய்) எண்ணமாக இருக்கலாம், விஜய் கையில் இருக்கும் சவுக்கை பார்த்தால் எம்.ஜி.ஆர் பயன்படுத்திய அதே சவுக்கு போல் தான் உள்ளதாக கூறினார்.

மேலும் உலகமே பாராட்டக்கூடிய நடிகர் அஜித்துக்கு இந்த பத்ம பூஷன் விருது கிடைத்திருப்பது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், விஜய் அரசியலுக்கு வந்த பிறகு அஜித்துக்கு இந்த விருது அளித்திருப்பது தூண்டிவிடுவது போல உள்ளது. மேலும் அஜித் தனது ரசிகர்களை குடும்பத்தை பார் என்று சொல்வதும், விஜய் தரப்பினர் வேலையை விட்டு மாநாடிற்கு வா என்று சொல்வதும் ஒரு ஸ்டண்டாகவே நான் பார்க்கிறேன். அஜித்தை கடவுளே தெய்வமே என அவரை பார்க்கும் ரசிகர்களிடையே, தங்களின் குடும்பத்தை பார் என்று அவர் சொன்னாலும் அவர்கள் கேட்க மாட்டார்கள். ஆனால் அவர் குடும்பத்தை பார் என்று சொல்வது சரியான விஷயம் என பார்த்திபன் தெரிவித்தார்.