புதுச்சேரியிலிருந்து சென்னை மற்றும் விசாகப்பட்டினத்திற்கு சுற்றுலா கப்பல் அறிமுகம்.!

வரும் ஜுன், ஜூலை மாதங்களில் சென்னை- விசாகப்பட்டினம்- புதுச்சேரி இடையே 3 சேவைகள் சுற்றுலா கப்பல் இயக்குவது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. கார்டில்லா க்ரூஸ் நிறுவனம் சார்பில் இயக்கப்பட உள்ள இந்த சுற்றுலா கப்பல், வரும் ஜூன் 30 ம் தேதி சென்னையில் புறப்படும் கப்பல் ஜூலை 2 ம் தேதி விசாகப்பட்டினம் வந்தடைகிறது. அதேநாளில் விசாகப்பட்டினத்தில் இருந்து புறப்படும் இந்த கப்பல் 4 ம் தேதி புதுச்சேரி சென்றடையும். மீண்டும் 4 ம் தேதி புதுச்சேரியில் புறப்பட்டு மறுநாள் 5 ம் தேதி சென்னை வந்தடையும்.

இரண்டாவது சேவையாக இந்த கப்பல் ஜூலை 7 ல் சென்னையில் புறப்பட்டு 9-ம் தேதி விசாகப்பட்டினம் வந்தடையும். அதேநாளில் இங்கிருந்து புறப்பட்டு 11ம் தேதி புதுச்சேரி சென்றடையும். பின்னர் அதேநாளில் புதுச்சேரியில் புறப்பட்டு 12 ம் தேதி சென்னை வந்தடையும்.

மூன்றாவது சேவையாக இந்த கப்பல் ஜூலை 14 ல் சென்னையில் புறப்பட்டு 16 ம் தேதி விசாகப்பட்டினம் வந்தடையும். பிறகு அதேநாளில் இங்கிருந்து புறப்பட்டு 18-ல் புதுச்சேரி சென்றடையும். மீண்டும் அதே நாளில் புதுவையில் இருந்து புறப்பட்டு மறுநாள் 19 ம் தேதி சென்னை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டண விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.