புதுச்சேரியின் இரு புராதனமான மற்றும் பிரசித்திபெற்ற ஸ்ரீ வேதபுரீஸ்வரர் மற்றும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில்களில் இ-உண்டியல் சேவையை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரியின் மிகவும் பிரசித்திபெற்ற ஸ்ரீ திரிபுரசுந்தரி ஸமேத ஸ்ரீ வேதபுரீஸ்வரர் மற்றும் ஸ்ரீ பெருந்தேவித் தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில்களுக்கு புதுச்சேரி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். மேலும் கூட்ட நெரிசல் காலத்தில் பக்தர்கள் தங்களது காணிக்கைகளை செலுத்துவதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுவதால், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் ஆலய வளாகத்தில் 8 இ – உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்த இ-உண்டியல் சேவையை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் காணிக்கை செலுத்தி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி புதுச்சேரி மண்டல அலுவலக முதன்மை மண்டல மேலாளர் ரவிசங்கர் சாஹூ, உதவி பொது மேலாளர் ஜே. எபினேசர் சோபியா,
புதுச்சேரி பிரதான கிளை மூத்த மேலாளர் கே. இளவழகன், கோயில் நிர்வாக அதிகாரி சீனிவாசன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதன்மை மண்டல மேலாளர் தரவிசங்கர் சாஹூ, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இறைப்பணியில் இந்த இ -உண்டியல் சேவை துவங்கிவைத்து பெருமிதம் கொள்கிறது. இவ்விழாவில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.