புதுச்சேரியில் முன்னாள் கவுன்சிலர் குமரன் தலைமையில் ஆயிரம் பேர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்: முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மாநில தலைவர் வைத்திலிங்கம் வாழ்த்து

புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலரும், வழக்கறிஞருமான குமரன் தலைமையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இன்று காங்கிரஸ் கட்சியில் இணையும் நிகழ்ச்சி வைசியால் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. முன்னதாக புதுச்சேரி கடற்கரை சாலையில் இருந்து ராஜ்பவன் தொகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இருசக்கர வாகனத்தில் பேரணியாக எஸ்.வி பட்டேல் சாலை, செஞ்சி சாலை வழியாக வைசியால் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வந்தடைந்தனர். தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்தியலிங்கம் ஆகியோர் முன்னிலையில் தங்களை காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைந்து கொண்டனர். அப்போது முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்தியலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் காங்கிரஸ் துண்டு அணிவித்து, பூங்கொத்து கொடுத்து அனைவரையும் வரவேற்றனர்.