பிரைட் ரைஸ் சாப்பிட்டு விட்டு செல்போனில் பேசியபடியே இறந்த கிடந்த ஐ.டி., ஊழியர்.! புதுச்சேரியில் சோகம்

புதுச்சேரி அரியாங்குப்பம் சீனுவாச கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி.
இவரது மகன் அல்போன்ஸ் (31), வில்லியனுார் பகுதியில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இதனிடையே திருமணமாகி சென்னையில் வசித்து வரும், இவரது சகோதரியை பார்க்க இவரது தாய் சென்றுள்ளார். வயதான தந்தை மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அல்போன்ஸ், கம்பெனியில் இருந்து பணியை முடித்துவிட்டு, கடையில், பிரைட் ரைஸ் வாங்கி வந்து, வீட்டில் இருந்த தந்தைக்கு கொடுத்துவிட்டு, அவரும் சாப்பிட்டுள்ளார். அதன்பின், அவர் அறைக்கு சென்று துாங்க சென்றார். நேற்று காலை அவரது தந்தை பார்க்கும்போது, அல்போன்ஸ் தனது கையை நெஞ்சில் வைத்தபடியும், மற்றொரு கையில், செல்போனை காதில் வைத்து பேசிய நிலையில், இறந்து கிடந்தார். மேலும் அவரது மூக்கில் இருந்து அதிக ரத்தம் வந்திருந்தது.

இச்சம்பவம் குறித்து ஆரோக்யசாமி அளித்த
புகாரின் பேரில், அரியாங்குப்பம் காவல்நிலைய போலீசார் அப்போன்ஸ் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.