புதுச்சேரி திமுக நடத்திய இப்தார் விருந்து: எதிர்கட்சி தலைவர் சிவா, முன்னாள் முதல்வர் நாராயணசாமி உட்பட 500 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்பு.!

புதுச்சேரி மாநில திமுக சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா. சிவா, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

புதுச்சேரி மாநில தி.மு.க. சார்பில் வில்லியனூர் சுல்தான்பேட்டை முகம்மதியா மஹாலில் இப்தார் விருந்து நடைபெற்றது. சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இரா. சிவா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 500 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை செய்து நோன்பு திறந்தனர். தொடர்ந்து நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்றனர். இந்த இப்தார் விருந்து நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, வைத்தியநாதன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சலீம், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவபொழிலன் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.