புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் 11-வது நாளான இன்று கேள்வி நேரத்தின் மீது பேசிய நியமன சட்டமன்ற உறுப்பினர் அசோக்பாபு, புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக தொழில் துவங்குவதற்கு ஏதுவாக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தும் திட்டம் உள்ளதா? கரசூரில் தொழில் பூங்கா அமைக்க மத்திய அரசு அளித்துள்ளதா? என்றார்.
இதற்கு பதிலளித்து முதல்வர் ரங்கசாமி பேசுகையில், முதலீட்டாளர் மாநாடு நடத்தும் திட்டம் அரசின் பரீசிலனையில் உள்ளது. கரசூரில் தொழில் பூங்கா அமைக்க மத்தியய அரசு அனுமதியளித்துள்ளது. ஜூலை மாதம் அந்த இடம் இடங்களாக பிரிக்கப்பட்டு ஒதுக்கப்படும். ஒரு தொழிற்சாலை துவங்க அனுமதி பெறுவதற்கு எவ்வளவு கடினமாக உள்ளது என்று அனைவருக்கும் தெரியும். ஒற்றை சாளர முறையில் அனுமதி தரப்படும், மூன்று மாதங்களுக்குள்ளாக தொழிற்சாலை துவங்க அனுமதி தேவையில்லை என தெரிவித்தோம். ஆனால் அதன்பிறகு எந்த தொழிற்சாலையும் வரவில்லை. ஏனெனில் அண்டை மாநிலமான தமிழகத்தில் நிறைய சலுகை கொடுக்கிறார்கள், இந்த முடிவை சுயமாக எடுக்க முடிகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டுக்கு சென்று பல தொழில் முனைவரை சந்தித்து, தொழிற்சாலை துவங்க அழைப்பு விடுத்தார். இதன்காரணமாக திண்டிவனத்தில் பார்மா பார், சிப்காட் தொழிற்பேட்டை கொண்டு வந்து நிறைய தொழிற்சாலைகள் வருகிறது. நமது எல்லையில் உள்ள , வானூர் இரும்பை உள்ளிட்ட இடங்களில் கூட பல தொழிற்சாலைகள் வருவதை பார்க்க முடிகிறது என்றார். அப்போது திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்றனர்.
ஆனால் நமது மாநிலத்தில் தொழிற்சாலைக்கு சலுகைகள், அனுமதி கொடுக்க மத்திய அரசிடம் கேட்க வேண்டிய நிலைமை. மின் சார கட்டண சலுகை, வரி விலக்கு கூட நம்மாம் முடிவு எடுக்க முடியாது, மின் சார இணைப்பை கூட விரைந்து கொடுக்க முடியவில்லை என்பது அனைவருக்கும் தெரியும்.
அப்போது குறுக்கிட்டு பேசிய சபாநாயகர் செல்வம்: இதெற்கெல்லாம் காரணம் அதிகாரிகள்தான் என்றார்.
முதல்வர் ரங்கசாமி: இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் அரசு நிர்வாகம் அது மாதிரி இருக்கிறது. தொழிற்சாலை அனுமதி தொடர்பா தலைமை செயலர்தான் முடிவு எடுக்க வேண்டியிருக்கிறது. இதத்காகத்தான் மாநில அந்தஸ்து தேவை என்று சொல்கிறோம் எனக்கு மட்டும் இப்போது கேட்கவில்லை. அடுத்து யார் வந்தாலும் தேர்வு செயப்பட்ட அரசாங்கத்துக்குத்தான் கேட்கிறோம். மாநில அந்தஸ்துன்பெறாவிட்டால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் புதுச்சேரி பின் தங்கியே இருக்கும். நாம் எவ்வளவோ முயற்சி எடுத்தாலும் வரவில்லை.
மேலும் அசோக்பாபு எத்தனை பேரை தொழில் துவங்க அழைத்து வந்தாலும், நான் அனுமதி கொடுக்கிறேன். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.