ஆம்பூர் மட்டன் பிரியாணி, வஞ்சிர மீன் வறுவல், சிக்கன் கிரேவி என தடபுடலாக இப்தார் விருந்து வைத்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன்… முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்பு.!!

இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படுகின்றது. விடியற்காலை முதல் விரதமிருந்து மாலையில் இப்தார் என்னும் நோன்பு திறக்கப்படுகின்றது. மதநல்லினக்க அடிப்படையில் புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் இப்தார் என்னும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அளித்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயரதிகாரிகள் மற்றும் முக்கிய விருந்தினர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து ஆளுநர் மாளிகை சார்பில் ஏற்பாடு செய்திருந்த அசைவ விருந்திலும் அனைவரும் பங்கேற்று விருந்து உண்டனர். விருந்தில் ஆம்பூர் மட்டன் பிரியாணி, சிக்கன் குருமா, வெஜ் பிரியாணி, வஞ்சிர மீன் பிஃரை, குல்ஃபி, காலிபிளவர் பகோடா, வெஜ் உருண்டை, நாண், திராட்சை ஜீஸ் என 18 வகையான உணவுகள் பரிமாறப்பட்டது.