புதுச்சேரி ஸ்ரீ யோகமாயா லலிதாம்பிகை‌ கோவிலில் லலிதா நவராத்திரி விழா

புதுச்சேரி குருமாம்பேட் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ யோகமாயா லலிதாம்பிகை திருக்கோவிலில், வசந்த நவராத்திரி என்கிற லலிதா நவராத்திரியை முன்னிட்டு மஹா அபிஷேகம் நடைபெற்று சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

புதுச்சேரி குருமாம்பேட் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ யோகமாயா லலிதாம்பிகை திருக்கோவில். இந்த திருக்கோவிலில் வசந்த நவராத்திரி என்கிற லலிதா நவராத்திரி இன்று தொடங்கியது. இதனையடுத்து, ஸ்ரீ லலிதா மஹாயாகம் நடைபெற்று ஶ்ரீ மஹா சாம்ராஜ்ய லலிதா மற்றும் ஶ்ரீ யோக மாயா லலிதாம்பிகைக்கு பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம், குங்குமம் , கலச நீர் என பல்வேறு திரவியங்கள் கொண்டு மஹா அபிஷேகம் செய்யப்பட்டு, சந்தனபட்டு மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு சோடச தீபாராதனைகள் காட்டப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. வரும் 07 ஆம் தேதிவரை தினந்தோறும் மஹாயாகம் நடைபெற்று அபிஷேகம் நடைபெற்றவுள்ளது. தொடர்ந்து ஶ்ரீ மஹா சாம்ராஜ்ய லலிதா மற்றும் ஶ்ரீ யோக மாயா லலிதாம்பிகைக்கு சகஸ்ரநாமம் பாடப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு லலிதாம்பிகை அம்மனை வழிபட்டு சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி மஹேஸ்வர சாஸ்திரி மற்றும் பக்தர்கள் சிறப்பாக செய்திருந்தனர். வசந்த நவராத்திரியின் முதல் நாளில் மிருதங்க கச்சேரி , வாய்ப்பாட்டு கச்சேரி நடைபெற்றது.