புதுச்சேரி அருகில் உள்ள ஆரோவில்
இசை அம்பளம் பள்ளியின் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இணைந்து, 7-ஆம் நூற்றாண்டின் தெய்வீக குழந்தை ஞானியான திருஞானசம்பந்தரின் வாழ்க்கை பற்றிய ஒரு அற்புதமான இயல்-இசை-நாடகம் (இயலிசை நாடகம்) பாரத்நிவாஸில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆரோவில் அறக்கட்டளையின் செயலாளர் மற்றும் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சரின் கூடுதல் செயலாளர் டாக்டர் ஜெயந்தி எஸ். ரவி, ஐஏஎஸ் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த நாடகம் திருஞானசம்பந்தரின் அற்புத வாழ்க்கையை பல காட்சிகளாக வெளிப்படுத்தியது:
பரவதி அம்மையால் ஞானப் பாலூட்டப்பட்ட சம்பந்தரின் சீர்காழிப் பிறப்பு, திருக்கோலக்கா, திருநெல்வாயில், வேதாரண்யம் போன்ற தலங்களில் நிகழ்ந்த அற்புதங்கள், சமணர்களுடனான வாதப்போரும், கூன் பாண்டியனை நிமிர்த்திய அருளாற்றல், அச்சல்புரத்தில் திருமணம் மற்றும் தீயில் ஒன்றிய முத்தி.
LKG முதல் 12-வது வகுப்பு வரையிலான மாணவர்கள், பரதநாட்டியம், பழந்தமிழ் இசை, மற்றும் யாழ் (பழங்கால வாத்தியம்) போன்றவற்றுடன் சம்பந்தரின் தேவாரப் பாடல்களை அருமையாக வழங்கினர்.
நிகழ்ச்சியில் பேசிய, டாக்டர் ஜெயந்தி எஸ். ரவி, இந்த கலைநிகழ்ச்சியை இந்தியா முழுவதும் பகிர வேண்டும்! முதலில் புதுச்சேரி அரசுக்கு இதை முன்வைத்து, பின்னர் பிற மாநிலங்களுக்கும் எடுத்துச் செல்வேன். இந்த நாடகத்தில் தமிழின் சக்தி, இசை, பக்தி மற்றும் நாயன்மார்களின் வரலாறு அடங்கியுள்ளது.”
அவர் இசை அம்பளம் பள்ளியின் முதல்வர் மற்றும் ஸ்ரீ அரவிந்தர் சர்வதேச கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SAIIER) தலைவர் டாக்டர் சஞ்சீவ் ரங்கநாதனை பாராட்டினார்.