நாளை (24-04-2025) வியாழக்கிழமை புதுச்சேரி காலாப்பட்டு மின்பாதையில் பராமரிப்பு பணிகள் காரணமாக பிம்ஸ் மருத்துவமனை, சுனாமி குடியிருப்பு, மத்திய சிறைச்சாலை, ஷாஷன் நிறுவனம், ஸ்டடி பள்ளி, நவோதயா வித்யாலயா பள்ளி, சட்ட கல்லுாரி, அம்மன் நகர், டி.ஏ.வி.பள்ளி, பெரியகாலாப்பட்டு மேற்கு பகுதி, புதுச்சேரி பல்கலைக்கழகம் ஊழியர்கள் குடியிருப்பு, புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஆலங்குப்பம், சஞ்சிவி நகர், கருவடிக்குப்பம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை மின்தடை செய்யப்படும்.
பிள்ளைச்சாவடி மின்பாதையில் பராமரிப்பு பணிகள் காரணமாக, சின்னகாலாப்பட்டு, புதுநகர், மேட்டு தெரு, பிள்ளைச்சாவடி, அன்னை நகர், வி.சி.குடியிருப்பு, எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மையம், புதுச்சேரி பல்கலைக்கழகம் கலாசார வளாகம், பெரியகாலாப்பட்டு, கனகசெட்டிக்குளம், உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை மின்தடை செய்யப்படும்.
இதேபோல் வில்லியனூர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணி செய்யப்படுவதால் காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை வில்லியனூர் பகுதிகளில் சுழற்சி முறையில் மின் வினியோகம் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.