புதுச்சேரி ஏனாம் பிராந்தியத்தில் கடந்த 60 நாட்களாக முறையாக குப்பைகளை அகற்றபடாமல் இருப்பதை கண்டித்து, ஏனாம் தொகுதி சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக் தலைமையில் அப்பகுதி மக்கள்100 க்கும் சட்டப்பேரவை வளாகத்தில் அரசுக்கு எதிராக பதாகைகளை கையில் ஏந்தியவாறு அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.
புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியம் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகில் உள்ளது. ஏனாமில் தினமும் சேகரிக்கும் குப்பைகள் கனகலாப்பேட் பகுதியில் கொட்டப்பட்டு வந்தது. இதனிடையே கோதாவரி ஆற்றங்கரை பகுதியில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் குப்பை கிடங்கு இருக்க கூடாது என மத்திய அரசு தெரிவித்தது. மேலும்
கனகலாபேட் பகுதியில் கொட்டும் குப்பைகளால், சுற்றுப்புற பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டதால், இந்த கிடங்கு மூடப்பட்டது.
இதனால் ஏனாம் பகுதியில் சேரும்
குப்பைகளை கொட்ட இடம் இல்லாததால், கடந்த 60 நாட்களாக ஏனாமில் குப்பைகள் அகற்றப்படவில்லை. சாலை முழுதும் குவியல் குவிலயாக குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் ஆங்காங்கே துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குப்பைகளை கொட்டுவதற்கு மாற்று இடம் ஏற்படுத்தி தராத புதுச்சேரி அரசை கண்டித்தும், வீதிகளில் தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற வலியுறுத்தியும், ஏனாம் தொகுதி சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட ஏனாம் தொகுதி மக்கள் இன்று புதுச்சேரி சட்டப்பேரவைக்கு வந்தனர். தொடர்ந்து அவர்கள் குப்பைகளை அகற்றாததை கண்டித்து கையில் பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து முதல்வர் ரங்கசாமியை சந்தித்து புகார் மனு அளித்தனர். மேலும் இன்றுக்குள் குப்பைகளை அகற்றாவிட்டால் நாளை முதல் சட்டப்பேரவை வளாகத்திற்குள் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து சுயேட்சை சட்டமன்ற கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக் கூறுகையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் முதல்வர் ரங்கசாமியை எதிர்த்து போட்டியிட்டு தான் வெற்றி பெற்றதால் ஏனாம் தொகுதி தொடர்ந்து புறக்கணிப்படுவதாகவும், டெல்லி சிறப்பு பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணாராவ் தூண்டுதலின் பேரில் குப்பைகளை அகற்றாமல், மக்கள் மத்தியில் தனக்கு கெட்டுபெயரை உண்டாக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக குப்பைகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.