புதுச்சேரியில் பெண் சமையல் கலைஞர், ஆண் நண்பருடன் மது அருந்தி கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறில் ஆண் நண்பரை கழுத்தில் காலால் மிதித்து கொலை செய்து விட்டு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடமாடிய வழக்கில், பெண் சமையல் கலைஞர் மற்றும் அவருக்கு உடைந்தயாக இருந்த ஜோதிடர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி முதலியார்பேட்டை போலீஸ் சந்து பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (40). ஆன்மீக சுற்றுலா ஏற்பாட்டாளராக இருந்தார். திருமணமாகத அவர், தனது அண்ணன் ராஜி வீட்டருகே இருந்த தனது சொத்தை மற்றொருவருக்கு விற்பனை செய்துவிட்டு அங்கேயே வாடகைக்கு தங்கி வந்தார். இவருக்கும் ஆன்மீக சுற்றுலா பயணத்தின்போது சமையல் கலைஞரான புதுச்சேரியை வெள்ளார் வீதியை சேர்ந்த விஜி என்கிற விஜயலட்சுமி (39) என்பவருடன் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கணவனை பிறிந்து ஒரு மகனுடன் வாழும் விஜி அவ்வப்போது ரவிக்குமார் வீட்டுக்கு சென்று மது அருந்தி விட்டு அங்கேயே தூங்கி விடுவார். இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி காலை விஜி வீட்டுக்கு வெளியே வந்து ரவிக்குமாரின் அண்ணன் ராஜி மற்றும் அக்கம்பக்கதினரை அழைத்து, இரவு மது அருந்திவிட்டு தூங்கிய ரவிக்குமார் தூக்கிட்டு கொண்டுள்ளார் என அழுதபடி கூறியுள்ளார். இதனை கண்ட அவரது அண்ணன் மற்றும் அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக ரவிக்குமாரை கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என கூறி உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த முதலியார்பேட்டை காவல்நிலைய போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே நேற்று காலை பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், ரவிக்குமாரை யாரோ கழுத்தில் கடுமையாக தாக்கியதால் தான் அவர் உயிரிழந்துள்ளார் என மருத்துவர்கள் முதலியார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் போலீசார் ரவிக்குமாருடன் இரவு தங்கிய விஜியை அழைத்து விசாரணை செய்ததில், அவர் தமக்கு எதுவும் தெரியாது என முன்னுக்கு பின் முரனாக பேசியுள்ளார். இதில் சந்தேகமடைந்த போலீசார் விஜியிடம் அவர்கள் பாணியில் விசாரணை நடத்தியதில், கடந்த 22
ஆம் தேதி இரவு சேலத்தை சேர்ந்த ஜோதிடர் ராஜா, விஜி மற்றும் ரவிக்குமாருக்கு பணியில் உதவியாக இருக்கும் சேத்திலால் ஆகிய நான்கு பேரும் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். இதில் சேத்திலால் வீட்டுக்கு சென்றுவிட, ஜோதிடர் ரவிக்குமார் வீட்டின் ஒரு அறையில் தூங்க சென்றுள்ளார்.
அப்போது விஜியும் ரவிக்குமாரும் மது அருந்தி கொண்டிருந்தபோது ரவிக்குமார் தனது வீடு மீண்டும் விற்பனைக்கு வருவதாகவும், அதனை வாங்க வேண்டும் எனவும் அதற்கு விஜி கொஞ்சம் பணம் கொடுத்து உதவுமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் தருவதாகவும் வீட்டை அவரது பெயரில் பதிவு செய்ய வேண்டும் என விஜி கூறியுள்ளார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த ரவிக்குமார் வீட்டை தனது பெயரில்தான் கிரயம் செய்யப்போவதாக கூற, இருவருக்கும் இடையே வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விஜி மது போதையில் சாய்ந்து அமர்ந்திருந்த ரவிகுமாரை கழுத்தில் மிதிக்க அவர் சம்பவ இடத்திலயே சரிந்துள்ளார். இதனை கண்ட விஜி அவர் கழுத்தில் கயிறை மாட்டி தற்கொலை செய்து கொண்டதுபோல் தொங்கவிட்டுள்ளார். தொடர்ந்து தூங்கி கொண்டிருந்த ஜோதிடர் ராஜா, மற்றும் சேதிலாலை அழைத்து நடந்ததை கூற அவர்கள் ரவிக்குமார் தற்கொலை செய்ததாகவே இருக்கட்டும் என கூறி அங்கிருந்து கிளம்பி விட்டது விசாரணையில் தெரியவந்தது.
இதனைதொடர்ந்து கொலையை மறைத்ததாக சேலத்தில் இருந்த ஜோதிடர் ராஜா, சேதிலால் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், கைது செய்யப்பட்ட பெண் உட்பட மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் பெண் மது போதையில் ஆண் நண்பரை காலால் மிதித்து கொலை செய்து தற்கொலை நாடகமாடிய சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.