சேதராப்பட்டு – குரும்பாபேட் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று (08-05-2025) வியாழக்கிழமை காலை 10.00 மணியிலிருந்து மாலை 05.00 மணி வரை கீழ்க்குறிப்பிடப்படும் பகுதிகளில், அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் மின் விநியோகம் முற்றிலும் தடைபடுமென்று பொதுமக்களுக்கு இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
சேதராப்பட்டு தொழிற்பேட்டை, சேதராப்பட்டு பழைய காலனி, சேதராப்பட்டு புதிய காலனி, சேதராப்பட்டு கிராமம், முத்தமிழ் நகர் ஒரு பகுதி மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.