புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, ஐதராபாத் நகரங்களுக்கு இண்டிகோ நிறுவனம் சார்பில் தினந்தோறும் விமானம் இயக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடிக்கும் நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும்படி மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேபோல் புதுச்சேரி விமான நிலையத்திற்கும் எச்சரிக்கை வந்துள்ளது.
மத்திய அரசு விடுத்துள்ள எச்சரிக்கையை தொடர்ந்து புதுச்சேரி விமான நிலையத்திற்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி.யிடம் வலியுறுத்தப்பட்டது.
அதன் அடிப்படையில் புதுச்சேரி விமான நிலையத்திற்கு 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீசார் கொண்ட கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனால் பயணிகள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை எனவும், அனைத்து நடவடிக்கைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்படுகின்றன எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள், வீடியோக்கள், அப்டேட்களுக்காக: www.geetamil.com