BREAKING : அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கும் குறையாத ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் சிறையில் ஞானசேகரனுக்கு எந்த சலுகைகளும் வழங்கக் கூடாது என்றும், 30 ஆண்டுகள் சிறை தண்டனையை குற்றவாளி ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், ஞானசேகரனுக்கு ரூ.90 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஆயுள் தண்டனையை எதிர்த்து ஞானசேகரன் தரப்பில் மேல்முறையீடு செல்ல இருப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.