Govt Job : புதுச்சேரி சுகாதாரத்துறையில் 144 வேலைவாய்ப்பு அறிவிப்பு! உடனே விண்ணப்பிங்க

புதுச்சேரி சுகாதாரத்துறையில் உள்ள ஏஎன்எம் செவிலியர், மகப்பேறு உதவியாளர், இசிஜி டெக்னீசியன், மருந்தாளர், சுகாதார உதவியாளர், தியேட்டர் அசிஸ்டென்ட் ஆகிய ஆறு பதவிகளில் மொத்தம் 144 பணியிடங்களை நேரடி ஆட்சேர்ப்பு மூலம் நிரப்ப அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சுகாதாரத்துறையின் சிறப்பு பணி அலுவலர் ஜோஸ்பின் சித்ரா மேரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, இப்பணியிடங்கள் குரூப்-சி பிரிவில் அடங்கும். போட்டி தேர்வு மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். புதுச்சேரியை பூர்வீகமாகக் கொண்டவர்கள் மற்றும் புதுச்சேரியில் வசிக்கும் இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்கக் கூடிய பதவிகள் மற்றும் காலிப்பணியிடங்கள் விவரம்:

ஏஎன்எம் செவிலியர் மற்றும் மகப்பேறு உதவியாளர் – 53
இசிஜி டெக்னீசியன் – 7
மருந்தாளர் – 43
சுகாதார உதவியாளர் – 24
தியேட்டர் அசிஸ்டென்ட் – 17
மொத்த பணியிடங்கள் – 144

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு மற்றும் தேர்வு முறை உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் [https://recruitment.py.gov.in](https://recruitment.py.gov.in) என்ற ஆள்சேர்ப்பு இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் ஜூன் 4 ஆம் தேதி காலை 10 மணி முதல் ஜூன் 24 ஆம் தேதி மாலை 3 மணி வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். போட்டித் தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தின்போது எந்தவொரு உதவியும் தேவைப்பட்டால் 0413-2229355 என்ற எண்ணை, அனைத்து வேலை நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

தற்காலிகமாக அறிவிக்கப்பட்டுள்ள இப்பணியிடங்கள், நிர்ணயிக்கப்படும் நேரத்தில் உள்ள உண்மையான காலிப்பணியிடங்களின் அடிப்படையில் மாற்றப்படும். பணியிட எண்ணிக்கையை அதிகரிக்கவோ குறைக்கவோ, அல்லது ஆட்சேர்ப்பு செயல்முறையை எந்த காரணமும் கூறாமல் ரத்து செய்யவோ அரசுக்கு முழுமையான உரிமை உண்டு.