இந்தியர்களே முதலிடம்… உலக வங்கி வெளியிட்ட அறிக்கை

வெளிநாடுகளில் உள்ளோர், தாயகத்துக்கு பணம் அனுப்புவதில்,  இந்தியர்களே முதலிடத்தில் உள்ளதாக, உலக வங்கி அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக வங்கி அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:நடப்பு 2023ம் ஆண்டில், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு பணம் அனுப்புவது, 55.53 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து, தொடர்ச்சி யான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

அதிக பணத்தை பெற்ற நாடுகளின் பட்டியலில், இந்தியா முதலிடம் வகிக்கிறது. இந்தியர்கள், கிட்டத்தட்ட 10.38 லட்சம் கோடி ரூபாயை, தாயகத்துக்கு அனுப்பியுள்ளனர். தங்கள் குடும்பங்களை ஆதரிப்பதிலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதிலும் இந்திய புலம்பெயர்ந்தோர் ஆற்றும் முக்கிய பங்குக்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும்.