புதுச்சேரியில் பொங்கல் பரிசு தொகை ரூ. 750 ஆக உயர்வு.. முதல்வர் ரங்கசாமி உத்தரவு

புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கூடுதலாக ரூபாய் 250 வழங்க முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து புதுச்சேரி முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக, தலா ரூ.500 அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. இந்நிலையில், அனைத்து குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டைதாரர்களுக்கும் கூடுதலாக ரூ.250 சேர்த்து வழங்க குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறைக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

இதன்மூலம் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களைச் சேர்ந்த மொத்தம் 3,38,761 அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இதற்காக மொத்தம் ரூ.8.47 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.