சட்ட மாமேதை அம்பேத்காரின் 135-வது பிறந்தநாளையொட்டி, புதுச்சேரி அரசு சார்பில் சட்டசபை எதிரே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் திரு உருவச் சிலைக்கு அரசு சார்பில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், சாய் சரவணகுமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்,
இதேபோல் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி தலைமையில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் பாரதிய ஜனதா கட்சி, அதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, மதிமுக மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.