இன்று சாம்பல் புதன்… கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது

கிறிஸ்துவர்களின் சாம்பல் புதன் தினத்தை முன்னிட்டு, புதுச்சேரியில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

கிறிஸ்வர்களின் தவக்காலம் சாம்பல் புதன்கிழமையில் இருந்து தொடங்கி, இயேசு உயிர்த்தெழுந்த பண்டிகையான ஈஸ்டர் வரை கடைபிடிக்கப்படுகிறது. இந்த காலத்தை இலையுதிர் காலம் என்றும் கூறுவதுண்டு.
பாவத்தில் இருந்து விடுதலைப் பெற்று மீண்டும் நம்மை சீரமைத்து கொள்ளக் கூடிய காலமாக இந்த தவக்காலம் ஒவ்வொரு கிறிஸ்தவர்களின் வாழ்க்கையில் முக்கியமாக கருதப்படுகிறது.

இன்று சாம்பல் புதனையொட்டி புதுச்சேரியில் உள்ள பல்வேறு கிறிஸ்துவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுடன் திருப்பலி நடைபெற்றது. புதுச்சேரி, உழவர்கரை பகுதியில் உள்ள புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில், ஏராளமான கிருஸ்துவர்கள் பங்கேற்று தவக்காலத்தை தொடங்கினர்.