புதுச்சேரி பாகூர் பகுதியில் அறிவிக்கப்படாத தொடர் மின்தடையை கண்டித்து அப்பகுதி மக்கள் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கருப்பு ஏற்றி அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி பாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த சில நாட்களாக முன் அறிவிப்பின்றி அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும், இதனால் பொதுமக்கள், விவசாயிகள், சிறு தொழில்கள், வர்த்தக நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாவும், அதனால் பாகூர் பகுதியில் தடையில்லா மின்சாரம் வழங்க வலியுறுத்தியும், பாகூர் மின்நிலையத்திற்கு நிரந்தர இளநிலை பொறியாளரை நியமிக்ககோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் இன்று பாகூர், குருவிநத்தம், பரிக்கல்பட்டு, சோரியாங்குப்பம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கருப்பு கொடி ஏற்றி புதுச்சேரி அரசுக்கு தங்களது எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர். மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி நாளை பாகூர் மின்துறை இளநிலை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தெரிவித்துள்ளனர்.