புதுச்சேரி சட்டப்பேரவையில் நாளை மறுநாள் (12/03/2025) பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உரையுடன் தொடங்கியது, நாளை மறுநாள் 2025-26ஆம் ஆண்டுக்கான புதுச்சேரி பட்ஜெடை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யவுள்ளார், மேலும் புதுச்சேரி பட்ஜெட் தாக்கல் செய்ய 13,600 கோடி ரூபாய் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில் துறைவாரியாக நிதியை இறுதி செய்வதற்காக முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெற்றது, சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், ஜெயக்குமார், திருமுருகன், சாய் சரவணன்குமார், தலைமை செயலாளர் சரத் சவுகான் உள்ளிட்ட அனைத்து துறை செயலாளர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
அடுத்த ஆண்டு புதுச்சேரிக்கு சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்பாக தாக்கல் செய்யப்படக்கூடிய முழுமையான பட்ஜெட் என்பதால் பல்வேறு முக்கியமான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.