புதுச்சேரியில் தனியார் பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழிற்சாலையில் வரி ஏய்ப்பை மறைப்பதற்காக லஞ்சம் வாங்கிய வணிகவரித்துறை அதிகாரிகள் முருகானந்தம், ஆனந்த், தொழிற்சாலைலை உரிமையாளர் மற்றும் பெண் ஆலோசகர் உட்பட நான்கு பேரை சி.பி.ஐ போலீசார் கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி காலப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரியை அடுத்த ஆரியூர் பகுதியில் சோலைசெல்வராஜ் என்பவருக்கு சொந்தமான சோலை மணி பேக்கரஸ் என்கிற பிளாஸ்டிக் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் வரி ஏய்ப்பு செய்ததை மறைப்பதற்காக அதன் உரிமையாளர் சோலைசெல்வராஜ் வணிகவரி ஆலோசகர் ராதிகா என்பவரை அனுகியுள்ளார். இதையடுத்து ராதிகா, இந்திராகாந்தி சதுக்கத்தில் உள்ள வணிகவரித்துறை
அதிகாரிகள் ஆனந்த் மற்றும் முருகானந்திடம் பேசி லஞ்சம் கொடுத்து வரி ஏய்ப்பை சரிசெய்துள்ளார். இதற்கான செல்போன் உறையாடல் சி.பி.ஐ போலீசாரிடம் சிக்கியது.
இதனை தொடர்ந்து அவர்கள் நேற்று இரவு புதுச்சேரி வணிகவரித்துறை அலுவலகத்திற்கு வந்து அதிரடியாக சோதனையில் ஈடுப்பட்டனர். மேலும் இதில் சம்பந்தப்பட்ட வருமானவரித்துறை ஆணையர்கள் உட்பட நான்கு பேரையும் சி.பி.ஐ போலீசார் தனித்தனியாக அழைத்து, பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இன்று மாலை வரை நீடித்த சோதனையின் முடிவில் லஞ்சம் பெற்றதற்கான ஆவணங்கள், லேப்டாப் உள்ளிட்டவை சிக்கியதை தொடர்ந்து, வணிகவரித்துறை அதிகாரிகள் முருகானந்தம், ஆனந்தன், தொழிற்சாலை உரிமையாளர் சோலைசெல்வராஜ், வணிகவரி ஆலோசகர் ராதிகா உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்து, புதுச்சேரி நீதிமன்ற தலைமை நீதிபதியும், சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியுமான சந்திரசேகரன் முன்னிலையில் ஆஜர்படுத்தியத்தினர். அப்போது நீதிபதி கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, அவர்கள் போலீஸ் பாதுகாப்புடன் காலப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
முதலமைச்சர் ரங்கசாமி பொறுப்பு வகிக்கும் வணிகவரித்துறையில் லஞ்சம் பெறப்பட்ட புகாரில் கடந்த 20 மணி நேரத்திற்கு மேலாக நடந்த சி.பி.ஐ சோதனையின் முடிவில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.