திடீரென சாலையில் நின்ற முதல்வரின் கார்: பெயர் வைக்க சொல்லி கையில் குழந்தையை கொடுத்த புதுச்சேரி தம்பதி… “ஸ்டாலின் பாரதி” என பெயர் சூட்டிய முதல்வர்..!

பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கடலூர் சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின், செல்லும் வழியில் புதுச்சேரியில் பெண் குழந்தை ஒன்றிற்கு ஸ்டாலின் பாரதி என பெயர் சூட்டி மகிழ்ந்தார்.


பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக புதுச்சேரி வழியாக கடலூர் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு, புதுச்சேரி மாநில திமுக சார்பில், புதுச்சேரி – தமிழக எல்லையான கோரிமேடு பகுதியில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், திமுக மாநில அமைப்பாளருமான இரா. சிவா தலைவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து முதல்வர் புதுச்சேரி வழுதாவூர் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில், சிறிது நேரம் ஓய்வுக்கு பின் கடலூர் புறப்பட்டு சென்றார். அப்போது அரியாங்குப்பம் பகுதியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சக்திவேல் தலைமையில், ஏராளமான திமுகவினர் முதல்வருக்கு சாலையோரம் நின்று உற்சாக வரவேற்பு அளித்த நிலையில், அப்போது முதல்வரை வரவேற்க வந்திருந்த தேங்காய்திட்டு பகுதியை சேர்ந்த மணிபாரதி – சங்கீதா தம்பதியினர் தங்களின் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டுமென முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து முதல்வர் அந்த பெண் குழந்தைக்கு ஸ்டாலின் பாரதி என பெயர் சூட்டி மகிழ்ந்தார்.