துபாயில், ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி 9வது சீசன் நடக்கிறது. துபாயில் நடந்த லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ பாகிஸ்தான், இந்தியா அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அந்த அணி 241 ரன்கள் மட்டுமே எடுத்தது.
42 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 42.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. மேலும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 51 சதத்தை நிறைவு செய்தார் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி.
முதல் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா, தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்து அரையிறுதிக்கு முன்னேறியது.