புதுச்சேரியில் போதை தலைக்கேறிய இளம்பெண் ஒருவர் நிதானம் இல்லாமல் பப் வாசலில் விழுந்து புறல்வதும், அவரை அவருடைய ஆண் நண்பர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு அங்கிருந்தவர்கள் உதவியுடன் ஆட்டோவில் ஏற்றிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரியில் போதை தலைக்கேறிய இளம்பெண் ஒருவர் நிதானம் இல்லாமல் பப் வாசலில் விழுந்து புறல்வதும், அவரை அவருடைய ஆண் நண்பர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு அங்கிருந்தவர்கள் உதவியுடன் ஆட்டோவில் ஏற்றிச் செல்லும் வீடியோ#pub #Puducherry #WeekendVibes pic.twitter.com/hUeWESx7g8
— Gee Tamil (@geetamilnews) January 28, 2024
புதுச்சேரி நகர பகுதியில் திரும்பிய பக்கமெல்லாம், விதவிதமான 1000 க்கும் மேற்பட்ட மதுக்கடைகள், மது அருந்தும் வசதியுள்ள பார்கள் உள்ளன. தற்போது ரெஸ்டாரண்டுகளில் மது அருந்தும் வசதி கொண்ட ரெஸ்டோ பாராக மாற்றப்பட்டுள்ளது. கீழ்தளத்தில் ரெஸ்டாரண்டும், மேல்தளத்தில் பார் வைக்கப்படுகின்றன. அத்துடன் இங்கு பார்ட்டி கொண்டாடும் வகையில் அதிக சத்ததுடன் இசை ஒலிக்கிறது. குடியிருப்புகளில் இருந்த ரெஸ்டாரண்ட்டுகள் பலவும் ரெஸ்டோ பார்களாக மாற்றப்பட்டுள்ளதால் பொதுமக்கள்மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ரெஸ்டோ பாருக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், நகரப்பகுதிகளில் ரெஸ்டோ பார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் வார இறுதி நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்து புதுச்சேரி வரும் சுற்றுலா பயணிகள் நள்ளிரவு வரை ரெஸ்டோ பார்களில் குடித்துவிட்டு போதையில் நகரில் உலா வருவதால், அதிக விபத்துகள் மட்டுமின்றி பல்வேறு சமூக விரோத செயல்களும் அரங்கேறி வருகின்றன. மேலும் இளம்பெண்கள் பலர் போதை தலக்கேறி பொது இடங்களில் அநாகரிகமாக நடந்துகொள்கின்றனர்.
அந்த வகையில் குடியரசு தின தொடர் விடுமுறையையொட்டி தனது ஆண் நண்பருடன் புதுச்சேரிக்கு வந்த இளம்பெண் ஒருவர் செட்டித் தெருவில் உள்ள ரெஸ்டோ பாரில் மது அருந்தி, கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கொண்டாட்டத்தை முடித்துவிட்டு அந்த இளம் ஜோடி ரெஸ்டோ பாரைவிட்டு வெளியே வருகின்றனர். அப்போது அந்த இளம்பெண் உச்சகட்ட போதையில், நிதானம் இல்லாமல் ரெஸ்டோ பார் வெளியே உருண்டு புறல்கிறார். அப்போது அவருடன் வந்த ஆண் நண்பர் அந்த இளம்பெண்ணை அழைத்து செல்ல நீண்ட நேரமாக முயற்சி செய்கிறார். ஆனால் முடியவில்லை. ஒருகட்டத்தில் அங்கிருந்தவர்கள் உதவியுடன் அந்த பெண்ணை அவர் ஆட்டோவில் ஏற்றிச் செல்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் கலாச்சார சீர்கேடுகள் ஏற்பட காரணமாக உள்ள இதேபோன்ற ரெஸ்டோ பார்களுக்கு அரசு அனுமதி வழங்கக்கூடாது என அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.