தொடர் மழை எதிரொலி… புதுச்சேரி மீனவர்கள் நாளை (08.01.2024) கடலுக்கு செல்ல தடை

இதுதொடர்பாக புதுச்சேரி அரசின்
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- புதுச்சேரி உட்பட வட தமிழக மாவட்டங்களில் தற்போது மழைபெய்து வருகிறது.குறிப்பாக 08.01.2024 அன்று புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை எச்சரிக்கை பெறப்பட்டுள்ளது.

எனவே புதுச்சேரி மீனவர்கள் தங்களது படகு மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடத்தில் வைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் கடல்காற்று மணிக்கு 55 கி.மீ வேகத்தில் வீசும் எனவும் வானிலை எச்சரிக்கை பெறப்பட்டுள்ளதால் புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 08.01.2024 அன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.