புதுச்சேரி மக்களே மிஸ் பண்ணீடாதீங்க.!! ஒரே இடத்தில் நீரிழிவு, ரத்த அழுத்தம், கண், காது, மூக்கு, தொண்டை, இருதயம், நுரையீரல், நரம்பியல், சிறுநீரக உள்ளிட்ட அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் இலவசம்.. மார்ச் 2 வரை

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசு, சுகாதார மற்றும் குடும்ப நலவழித்துறை சார்பாக ‘மாபெரும் சுகாதாரத் திருவிழா’ புதுச்சேரி, கருவடிக்குப்பம், சிவாஜி சிலை அருகில் உள்ள காமராஜர் மணி மண்டபத்தில் இன்று‌ (28.02.2025) தொடங்கி வரும் 02.03.2025 வரை நண்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சுகாதார திருவிழாவில் பொது சுகாதார சேவைகள், வாய், மார்பக, கர்ப்பவாய் புற்றுநோய் பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள், நீரிழிவு (சர்க்கரை), ரத்த அழுத்தம், இரத்த பரிசோதனைகள், கண், காது, மூக்கு, தொண்டை, மனநலம் மற்றும் குழந்தைகளுக்கான ஆலோசனைகள், இருதயம், நுரையீரல், நரம்பியல், சிறுநீரக நோய்க்கான பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள், அந்தந்த துறை சார்ந்த சிறப்பு வல்லுனர்களால் இலவசமாக வழங்கபடுகின்றன.

மேலும் சுகாதார கண்காட்சி, ஆயுஷ் மற்றும் யோகா உடற்பயிற்சி முறைகள், ஆரோக்கிய உணவு திருவிழா போன்றவை இத்திருவிழாவில் இடம்பெற்றுள்ளன. மேலும் தேவைப்படுபவர்களுக்கு மருந்து, மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த சுகாதார திருவிழாவின் முக்கிய அம்சங்கங்கள் கீழ்வருமாறு

1. சுகாதார கண்காட்சி. தேசிய சுகாதார இயக்ககத்தின் கீழ் உள்ள அனைத்து தேசிய நலவாழ்வுத் திட்டங்களின் முக்கிய கோரிக்கைகள் மற்றும் அந்த திட்டத்தின் விழிப்புணர்வு கண்காட்சி.

2. சிறப்பு மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை இரும்புச்சத்து, சர்க்கரை, இரத்த கொதிப்பு, உடல் பருமன் பரிசோதனை, மார்பக x ரே, சுருள் படம் (ecg), எக்கோ (echo) ultrasound (அல்ட்ராசௌன்ட்) . அனைத்து இரத்த பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படுகிறது.

3. சிறப்பு மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனை-இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை, ராஜிவ் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை. இந்திரா காந்தி மருத்துவ கல்லூரியில் இருந்து இருதயம், சிறுநீரகம், நரம்பியல் பொது மருத்துவம், நுரையீரல், மன நல மருத்துவம், கண், காது மூக்கு தொண்டை, எலும்பு,வாய், மகப்பேறு மருத்துவர்கள் பங்கு பெற்று சிறப்பு ஆலோசனை வழங்கப்படுகிறது.

4. இந்திய மருத்துவமுறை மற்றும் சிறப்பு உணவு கண்காட்சி : இந்த ஆண்டு சர்வதேச தானியங்களின் ஆண்டு என்ற கருபொருளை உள்ளடக்கி ஆரோக்கியமான உணவு கண்காட்சி புதுச்சேரி அரசு உணவு கட்டுப்பாட்டு துறை மூலமாக இடம்பெற்றது. மேலும் சித்தா ஹோமியோ, ஆயுர்வேத, நாட்டுரோபதி போன்ற இந்திய மருத்துவ முறை (Indian System of Medicine) மருத்துவர்கள் பங்கு பெற்று ஆலோசனை மற்றும் மருந்துகள் வழங்குகின்றனர்.

மேலும் மருத்துவ குணம் கொண்ட செடிகளை அதன் முக்கியத்துவத்தையும் காட்சி படுத்தி இருந்தனர். தொற்றா நோய் உள்ளவர்கள் உண்ணும் உணவுகள் அதன் முக்கிய அம்சங்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது.

‘அனைவருக்கும் ஆரோக்கியமான நல்வாழ்வு” என்ற கருப்பொருள் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்ற மாபெரும் சுகாதார திருவிழாவில் முக்கிய இலக்கு என்னவென்றால் ‘இன்றே செயல்படுவீர் நாளைய மாற்றத்திற்கு என்பதாகும்.

ஆரோக்கியமான காலை உணவுடன் ஆரோக்கியமான வாழ்வை ஆரம்பிப்போம், வருமுன் காப்போம் என்ற முன்னெடுப்புடன் துவங்கப்பட இருக்கின்ற இம்மாபெரும் சிறப்பு அம்சங்களாக தேவையான அனைத்து ரத்த பரிசோதனைகளும், தலை சிறந்த வல்லுனர்களால் அனைத்து நோய்களுக்கான ஆலோசனைகள் வழங்கப்பட இருப்பதும், ஆயுஷ் மற்றும் யோகா உடல்நிலை பயிற்சி முறை கற்பித்தலும், சுகாதார கண்காட்சிகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதலும் ஆகும்.

இவ்வளவு சிறப்பு அம்சங்கள் கொண்ட மாபெரும் சுகாதார திருவிழாவில் புதுவை மக்கள் அனைவரும் கலந்து கொண்டு வருமுன் காப்போம்’ என்ற கூற்றுக்கு ஏற்ப மக்கள் அனைவரும் தங்களை நோயிலிருந்து காத்துக் கொள்ள இலவசமாக அனைத்து மருத்துவ சேவைகளையும் பயன்படுத்தி பலன் பெறுமாறு சுகாதார துறை இயக்குனர் ரவிச்சந்திரன் புதுச்சேரி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.