கோடை கால நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வது எப்படி? முழு விபரம் உள்ளே.!!

புதுச்சேரியில் தற்போது நிலவி வரும் கோடைகாலத்தில் வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டது. இதன் காரணமாக கோடை காலத்தில் பொதுவாக பரவக்கூடிய தொற்று நோய்கள் பற்றிய விழிப்புணர்வு செய்தியை புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

தோல், கண்கள், செரிமான மண்டல தொந்தரவுகள், அம்மை நோய்கள், கோடை காலத்தில் நிலவும் சளி, இருமல் மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக வரக்கூடிய ஹீட் ஸ்ட்ரோக் போன்ற நோய்கள் உருவாக அதிக வாய்ப்பு உள்ளது.

வெப்ப பக்கவாதம் (ஹீட் ஸ்ட்ரோக்) என்பது கோடை காலத்தில் அதிக வெப்பத்தினால் ஏற்படும் தலைவலி, தலைசுற்றல், பலவீனம், வெப்ப சோர்வு போன்ற அறிகுறிகள் ஆகும். இதனால் உறுப்பு செயலிழப்பு, சுய நினைவு குறைவு, மேலும் உயிரிழப்பு கூட ஏற்படலாம்.
வெப்ப பக்கவாதத்தின் போது ஐஸ் கட்டிகள், தண்ணீர் அல்லது குளிர்ந்த காற்றின் உதவியோடு உடலை வெளியில் இருந்து உடலை குளிர்வித்து சிகிச்சை அளிக்க முடியும். விரைந்து இச்சிகிச்சை அளிப்பதன் மூலம் உயிரிழப்பை தவிர்க்கலாம்.

கோடை காலத்தில் உணவு விஷம் என்பது மக்களுக்கு அடிக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதற்கு காரணம் சூடான ஈரப்பதமான சூழ்நிலை பாக்டீரியா போன்ற கிருமிகள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து, உணவு மாசு படுவதற்கு ஏதுவாக அமைகிறது. இதன் மூலம் வயிற்று அசௌகரியம், வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படுகின்றன. இதன்மூலம் வயிற்றுப்போக்கு, டைபாய்டு, காலரா, மஞ்சள் காமாலை ஆகிய நோய்களும் கோடை காலத்தில் எளிதாக தொற்றிக் கொள்ளக் கூடியவைகள்.
இவை அனைத்தும் ஏற்படாமல் இருக்க சரியாக சமைக்கப்படாத இறைச்சி, அசுத்தமான தண்ணீர், சாலையோர வியாபாரிகள் திறந்த வெளியில் வழங்கப்படும் உணவு ஆகியவற்றை மக்கள் தவிர்க்க வேண்டும்.
அதுமட்டுமன்றி சுத்தமான குடிநீரை பருக வேண்டும். நீரை கொதிக்க வைத்து ஆற வைத்து கை படாமல் கோடை காலத்தில் மக்கள் பருக வேண்டும். பழங்கள், காய்கறிகள் ஆகிய அனைத்தையும் நன்றாக கழுவி உபயோகப்படுத்த வேண்டும்.

கோடை காலத்தில் ஏற்படும் ஒருவகை வைரசால் ஏற்படுகிற கண் புண் எனப்படுகின்ற கஞ்சன்டிவைட்டீஸ் ஏற்படுகிறது. இதை தவிர்க்க சன் கிளாஸ் பயன்படுத்துதல், கண்களை தொடுவதை தவிர்த்தல், முறையான சிகிச்சை எடுத்தல் போன்ற கண் பாதுகாப்பு முறைகளை பயன்படுத்துவதன் மூலம் மக்கள் பயனடையலாம்.

கோடை காலத்தில் மிக சாதாரணமாக ஏற்படும் நோய்களில் முக்கியமான ஒன்று நீரிழப்பு மற்றும் அதிக வெப்பத்தினால் ஏற்படும் தலைவலி ஆகும்.
வெயில் காரணமாக மக்களுக்கு வியர்வையில் அதிக அளவு உப்பு சத்துக்கள் வீணாகிறது.
இதை சரி செய்ய உப்பு கலந்த மோர் மற்றும் நீர் பானங்கள் அல்லது ஓஆர்எஸ் எனப்படும் உப்பு கரைசல் நீர் எடுப்பதன் மூலம் நீரிழப்பை தவிர்க்க முடியும்.

இந்த கோடை காலங்களில்
வைரஸ் கிருமியால் குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, புளு போன்ற காய்ச்சல் மற்றும் பொன்னுக்கு வீங்கி, சின்னம்மை, தட்டம்மை நோய் போன்ற நோய்களும் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இவை குழந்தைகள் இரும்பும் பொழுதும் தும்மும் பொழுதும் சுலபமாக அடுத்தவர்களுக்கு பரவக்கூடிய வைரஸ் நோய்கள் ஆகும். இந்நோய்கள் பரவாமல் தடுக்க அடிக்கடி கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவுதல், தன்சுத்தம் பேணுதல், முகக்கவசம் அணிதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உதவும் என்றும், வெயிலால் ஏற்படும் நோய்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அவ்வாறு ஏற்பட்டால் தற்போது மக்களை காப்பாற்ற தேவையான மருந்துகளோடு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார மையத்தினை அணுகி சிகிச்சை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.