சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நல்ல அணி என்றும், நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் சரியாக ஆடவில்லை. அது உண்மைதான். வரும் போட்டிகளில் வீரர்கள் நன்றாக ஆடுவார்கள் என நம்பிக்கை உள்ளதாக புதுச்சேரியில் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமி துவக்க விழாவில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே உள்ள கிரிக்கெட் ஆர்வத்தை ஊக்கப்படுத்த சூப்பர் கிங்ஸ் அகாடமி நிறுவப்பட்டு, 25 க்கும் மேற்பட்ட சூப்பர் கிங்ஸ் அகாடமி கிரிக்கெட் பயிற்சி மையம் செயல்பட்டு வருகின்றனது. இந்நிலையில் புதுச்சேரியில் சூப்பர் கிங்ஸ் அகாடமியின் முதல் பயிற்சி மையம் மூலக்குளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இன்று ( StandsFord School) திறக்கப்பட்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ருத்துராஜ் கைக்குவாட் , சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்று கிரிக்கெட் அகாடமியை திறந்து வைத்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், தோல்விக்கு காரணமே கிடையாது சார். இது Game. விளையாட்டுல வெற்றி, தோல்வி எல்லாருக்கும் இருக்கும்.
வெற்றி பெறும்போது பாரட்டுறீங்க. தோற்றுவிட்டால் நல்லா பண்ணலனு சொல்றீங்க.. சரியா ஆடல என்பது உண்மைதான். அதை சரி செய்ய முயற்சி பண்ணிட்டு இருக்கோம். 2010-ல் இதேபோல தொடர் தோல்விகளை சந்தித்து இறுதியில் கோப்பையை வென்றோம். அதனால், மீதமுள்ள போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கு என கூறியிருக்கிறார்.