மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி புதுச்சேரி அரசு அரசு சார்பில் அவரது உருவப் படத்திற்கு முதலமைச்சர் ரங்கசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் இன்று புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத் துறை சார்பில் கொண்டாடப்பட்டது. கடற்கரை சாலையில் உள்ள நகராட்சி கட்டிட வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அரசு சார்பில் முதலமைச்சர் ரங்கசாமி, துணை சபாநாயகர் ராஜவேலு, அமைச்சர் லட்சுமி நாராயணன், அரசு கொறடா ஆறுமுகம், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஸ்கர், ரமேஷ் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.