புதுச்சேரி மின்துறையில் கட்டுமான உதவியாளர் பணிக்காக 04.04.2025 அன்று அறிவிக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பப் பதிவு முடிந்த நிலையில், விண்ணப்பதாரர்கள் தங்களது சுயவிவர ஆவணங்கள் மற்றும் நகல்கள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என மின்துறை தெரிவித்துள்ளது.
இதற்கான கடைசி நாள் 30.05.2025 மாலை 5.00 மணிக்கு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆவணங்களை, மின்துறை தலைவர் மற்றும் கண்காணிப்பு பொறியாளர், மின்துறை, எண்.137, என்.எஸ்.சி போஸ் சாலை, புதுச்சேரி – 605 001 என்ற முகவரிக்கு நேரில் கொண்டு வர வேண்டும்.
மேலும், விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப எண், பெயர், மற்றும் பிற விவரங்களை சரியாகச் சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்பு நியமன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மின்துறை கண்காணிப்புப் பொறியாளர் மற்றும் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரி அறிவித்துள்ளனர்.