நெல்லிதோப்பு தொகுதியில் 16 ஆயிரம் குடும்பங்களுக்கு காலண்டர் மற்றும் கரும்பு: திமுக தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் ஜே.வி.எஸ் சரவணன் வழங்குகிறார்

புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமனின் மகனும், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினருமான ஜே.வி.எஸ். சரவணன் (எ) ஆறுமுகம் நெல்லித்தோப்பு தொகுதியில் தொடர்ந்து பல்வேறு மக்கள் நலப்பணியில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக தொகுதி மக்களுக்கு மருத்துவ முகாம்களை நடத்தி, இலவசமாக மருந்து மாத்திரைகளை வழங்குதல், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல், கோவில் திருப்பணிகளுக்கு தேவையான நிதியுதவி வழங்குதல், விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்குதல் மற்றும் தொகுதியில் குடிநீர், சாலை வசதி, கழிவு நீர் வாய்க்கால் உள்ளிட்ட தொகுதி மக்களின் அடிப்படை பிரச்சனைகள் அரசு அதிகாரிகளிடம் கொண்டு சென்று தீர்வு காண்பது மட்டுமின்றி, தனது சொந்த செலவிலும் பல்வேறு பணிகளை செய்து வருகின்றார்.

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு புத்தாண்டு மற்றும் தைத்திருநாள் பொங்கலைமுன்னிட்டு நெல்லித்தோப்பு தொகுதியில் வெள்ளிக்கிழமை (29.12.2023)அன்று திமுக சார்பில் தொகுதி மக்கள் 16 ஆயிரம் குடும்பங்களுக்கு கலைஞர் கருணாநிதி, முதல்வர் மு.க. ஸ்டாலின் , அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருவம் பொறித்த தினசரி காலண்டர் மற்றும் பொங்கல் கரும்பு வழங்கும் தொடக்க விழா திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஜே.வி.எஸ். சரவணன் (எ) ஆறுமுகம் தலைமையில் காராமணிக்குப்பம் முருகன் கோவில் அருகில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நெல்லித்தோப்பு தொகுதி காராமணிக்குப்பம் பகுதி வாழ்மக்களுக்கு வீடு வீடாக திமுக தலைமை செயற்கு உறுப்பினர் ஜே.வி.எஸ். சரவணன் (எ) ஆறுமுகம் தலைமையில் தினசரி காலண்டர் கரும்பு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் திமுக தொகுதி துணைச் செயலாளர் தமிழ்மணி, திமுக இளைஞரணி மாநில துணை அமைப்பாளர் ஜே.சந்துரு ,மாநில பிரதிநிதி எஸ். சந்துரு, முன்னாள் தொமுச நிர்வாகி கலியசாமி, திமுக கிளை நிர்வாகிகள் முத்து, கமல்பாலா, குமரன், நாகராஜன், சக்திவேல், ஏழுமலை, இளங்கோ ,சுகுமார், பாபு, ஸ்ரீதர் குமார், சோமு, ஜார்ஜ் கதிரவன், ஜான்ராஜ், லூயிஸ், ஜான் குலோத் சையது, முருகன், டேவிட், ஜோசப், , ஸ்டாலின், தோப்பு கணேசன், வினோத், சதீஷ்,ஸ்ரீதர், தட்சிணாமூர்த்தி, ராஜி , அருள் சிவராஜ், விமல், சக்திவேல், அசோக், கணேசன், விமல், சபரி, சரவணன், பாஸ்கரன், கங்காதரன், காத்தவராயன், ஜோசப், பெரியநாயகி சாமி, அப்பு, சந்திரன் பகலவன் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டு வழங்கினார்கள்.