பாமக சித்திரை முழுநிலவு மாநாடு: புதுச்சேரியில் நாளை (11.05.2025) மதுக்கடைகளை மூட உத்தரவு!

நாளை மகாபலிபுரத்தில் பாமக சார்பில் சித்திரை முழுநிலவு இளைஞர் மாநாடு நடைபெறவுள்ளதை முன்னிட்டு, பொது அமைதியை‌ காக்கும் வகையில் புதுச்சேரியில்‌ அனைத்து மதுக்கடைகளையும் நாளை மதியம் 1 மணிக்கு மேல் மூடுமாறு காலால் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதனிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு, தமிழக காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்நிலையில் நாளை மகாபலிபுரத்தில் பாமகவின் சித்திரை முழுநிலவு இளைஞர் மாநாடு நடைபெற‌‌ உள்ளதை முன்னிட்டு, பொது அமைதியை பேணும் நோக்கத்தில், புதுச்சேரியில் நாளை நண்பகல் 1 மணி முதல் அனைத்து சாரயம், கள்ளு, மதுபானக் கடைகள், பார்கள், உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் மதுபானம் வழங்கும் விடுதி ஆகியவை அனைத்தும் மூடுமாறு காலால் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநாட்டு செல்வோர் அதிகளவில் புதுச்சேரி வழியாக செல்வார்கள் என்பதால், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.