புத்தாண்டு பிறப்பையொட்டி புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலில் விடியற்காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று விநாயகரை தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆங்கில புத்தாண்டையொட்டி புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, தங்ககவசம் அணிவிக்கப்பட்டு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட உற்சவர் மண்டபத்தில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது.