புதுச்சேரியில் குரூப் பி பணியிடங்களில் எம்பிசி-க்கு மீண்டும் இடஒதுக்கீடு: சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

இதுகுறித்து புதுச்சேரி சட்டமன்றத்தில் முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி அரசில் குரூப் B பணியிடங்கலான SI, விவசாய அதிகாரி உள்ளிட்ட 9 துறைகளில் உள்ள 138 பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த ஆண்டு அரசாணை வெளியிடபட்டது. இப்பணியிடங்களை நிரப்புவதற்கு OBC பிரிவுக்கு 33% ஒதுக்கீடு செய்யப்பட்டது, ஆனால் MBC, EBC போன்ற பிரிவுகளுக்கு உரிய ஒதுக்கீடு வழங்கவில்லை.இதனை அடுத்து உள் ஒதுடுக்கீடு வழங்கி பணியிடங்களை நிறப்புவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை ரத்து செய்யபடுக்கிறது என்றும், புதிய அரசாணை வெளியிடப்பட்டு பணியிடங்கள் நிரப்பபடும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.