10-ம் வகுப்பு தேர்வு முடிந்து வீட்டிலிருந்த சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற தாயின் கள்ளக்காதலன்.! புதுச்சேரி முத்தியால்பேட்டையில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்…

புதுச்சேரி முத்தியால்பேட்டை, வைத்திக்குப்பத்தை சேர்ந்தவர் பூவரசன் (45). இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் இவர் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு 16 வயதில் மகள் உள்ளார். அவர் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் பூவரசன் அடிக்கடி அந்த பெண் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பூவரசன் வழக்கம் போல் அந்த பெண் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அந்த பெண் வீட்டில் இல்லை. அவருடைய மகள் மட்டும் வீட்டில் படுத்துக்கொண்டிருந்துள்ளார்.

இதனிடையே பூவரசன் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். பிறகு நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு அந்த பெண் வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்து பக்கத்து வீட்டில் புகுந்துக்கொண்டார். பிறகு அக்கம்பக்கத்தின் ஓடிவந்தவுடன் பூவரசன் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் அம்மா முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து விசாரணை நடத்தி பூவரசனை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையே பூவரசன் முன்ஜாமீன் பெறுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த சோலை நகர் பகுதியில் ஏற்கனவே கடந்த ஆண்டு சிறுமி ஒருவர் பாலியல் பலாத்கார செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும்
கடந்த 10 நாட்களில் 3 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் பெண் பிள்ளைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.