NEET UG 2025: புதுச்சேரி ஆகாஷ் இன்ஸ்டிட்யூட் மாணவர்கள் தேசிய அளவில் சாதனை!

மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதித் தேர்வான NEET UG 2025-ல், புதுச்சேரி ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் (AESL) மாணவர்கள் தேசிய அளவில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

நேற்று தேசிய தேர்வுகள் அமைப்பு (NTA) வெளியிட்ட முடிவுகளின் அடிப்படையில், புதுச்சேரி கிளையில் பயின்ற நான்கு மாணவர்கள் பின்வருமாறு சிறந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்:

பிரித்வி ராஜன் கே – 585/720
டி. ராமநாதன் – 581/720
சோமேஸ்வர் ஜி – 568/720
வைஷ்ணவி – 549/720

இந்த வெற்றி குறித்து ஆகாஷ் நிறுவனத்தின் தலைமை கல்வி மற்றும் வணிகத் தலைவர் திரு. தீரஜ்குமார் மிஸ்ரா கூறுகையில், NEET UG 2025 தேர்வில் எங்கள் மாணவர்கள் பெற்றுள்ள மகத்தான வெற்றிக்கு நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். தேசிய அளவில் மிகுந்த போட்டியுடன் நடத்தப்படும் இந்த தேர்வில், உயர்ந்த மதிப்பெண்கள் பெறுவது எளிதல்ல. இது மாணவர்களின் கடின உழைப்பு, பெற்றோர் ஆதரவு மற்றும் எங்கள் பயிற்சி தரத்தின் வெளிப்பாடாகும்.

மாணவர்களின் மருத்துவப் பயணம் இதனால் இன்னும் உறுதியடைகிறது என்றும், அவர்களுக்கு எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் எனவும் அவர் கூறினார்.