புதுச்சேரியில் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் ஊசுடு தொகுதிக்கு நியமிக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தமிழகத்திலும் போட்டியிடும் என்று கட்சியின் நிறுவனரும், புதுச்சேரி முதல்வருமான ரங்கசாமி அண்மையில் அறிவித்திருந்தார். இந்நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு முதற்கட்டமாக புதுச்சேரி மாநிலத்திற்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியிக்கு ஊசுடு தொகுதிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளான, ஊசுடு தொகுதி பொறுப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் M. வைத்தியநாதன், கணேசன் ஆசிரியர், இவர்களின் முன்னிலையில், தொகுதி தலைவர் A.D.S தாமோதரன் அவர்களின் தலைமையில் முக்கிய என்.ஆர். காங்கிரஸ் பொறுப்பாளர்கள் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமிமை சந்தித்து, சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.