பஹல்காம்‌ தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஆரோவில்லில் மௌவுன‌‌ அஞ்சலி செலுத்தப்பட்டது

காஷ்மீரின் எழில்மிகு பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22 அன்று நிகழ்ந்த கொடூரமான தீவிரவாதத் தாக்குதலில் இன்னுயிர் நீத்த அப்பாவிகளுக்கு ஆரோவில் சமூகம் இன்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியது. SAIIER கலாச்சார மையத்தில் நடைபெற்ற இந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில், “ஒற்றுமையே வெல்லும்” என்ற உறுதியான செய்தியுடன் அனைவரும் ஒன்று திரண்டனர்.

இதில் 70-க்கும் மேற்பட்ட ஆரோவில் சமூக உறுப்பினர்கள் உணர்வுப்பூர்வமாகப் பங்கேற்று,
அமைதியின் அடையாளமாக மெழுகுவர்த்தி ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். மேலும் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன.
“ஆரோவில் நாளை” மாத இதழின் துயரத்தை வெளிப்படுத்தும் சிறப்புப் பதிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் பேசிய‌ குஜராத் மாநிலத்தின் கூடுதல் தலைமை செயலரும், ஆரோவில் செயலாளருமான டாக்டர் ஜெயந்தி எஸ். ரவி, ஐ.ஏ.எஸ் அவர்கள், தனது இரங்கல் உரையில் கூறியதாவது: “பஹல்ல்காமின் அமைதியான பள்ளத்தாக்கில் நிகழ்ந்த இந்த மனிதாபிமானமற்ற செயல் மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்த அப்பாவிகளின் குடும்பங்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதுபோன்ற துயர சம்பவங்கள் இனியும் நிகழக்கூடாது என்பதே எங்களது மனப்பூர்வமான பிரார்த்தனை‌ என்றார்.