புதுச்சேரியில் நாளை (15-02-2024) சனிக்கிழமை மின்தடை… எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

வில்லியனூர் – காலாப்பட்டு மின்பாதையில் நாளை (15-02-2025) சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அதன்படி, பிம்ஸ் மருத்துவமனை, சுனாமி குடியிருப்பு, மத்திய சிறைச்சாலை, ஷாஷன் நிறுவனம், ஸ்டடி பள்ளி, நவோதயா வித்யாலயா பள்ளி, சட்டக் கல்லூரி, அம்மன் நகர், பெரிய காலாப்பட்டு ஒருபகுதி ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

புதுச்சேரி பல்கலைக்கழகம் ஊழியர்கள் குடியிருப்பு, புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஆலங்குப்பம், சஞ்சீவி நகர், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், கருவடிக்குப்பம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.

சின்னகாலாப்பட்டு, புதுநகர், மேட்டுதெரு, பிள்ளைச்சாவடி, அன்னை நகர், வி.சி. குடியிருப்பு, எம்.எஸ்.எம்.இ. தொழில்நுட்ப மையம், பெரிய காலாப்பட்டு, கனகசெட்டிகுளம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.