பலாப்பழத்தில் முடிந்த புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொட​ர்.! சட்டப்பேரவையே திணற திணற ட்ரீட் வைத்த பாஜக சட்டமன்ற உறுப்பினர்…

புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரத்திற்கு, புதுச்சேரி விமான நிலையம் அருகில் 30 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இங்கு மா, பலா, வாழை, தென்னை, முந்திரி போன்றவற்றை பயிரிட்டுள்ளார். தற்போது, பலாப்பழ சீசன் களை கட்டியுள்ளது. தனது நிலத்தில் விளைந்த பலாப்பழங்களை, முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், நண்பர்களுக்கும் வழங்குவது கல்யாணசுந்தரத்தின் வழக்கம்.

அந்த வகையில் புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று காலாப்பட்டு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம், தனது தோட்டத்தில் விளைந்த பலாபழங்களை மினி வேனில் வைத்து சட்டப்பேரவைக்கு கொண்டு வந்தார். தொடர்ந்து கல்யாணசுந்தரம் முதல்வர் ரங்கசாமியிடம் பலாப்பழங்களை வழங்க, பெரிய சைஸ் பலாவை வியப்புடன் பார்த்தவாறு புன்சிரிப்புடன் முதல்வர் பெற்று கொண்டார். இதேபோல் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பலாப்பழங்களை வழங்கினார். இவ்வாறு பலாப்பழத்துடன் புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொட​ர் முடிந்தது.