அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் இனி மாதந்தோறும் 2 கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்படும்: முதல்வர் ரங்கசாமி பட்ஜெட்டில் அறிவிப்பு

புதுச்சேரி மாநில பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று, 2025 – 2026ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, நிதித்துறை பொறுப்பு வைக்கும் முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். ரூபாய் 13,600 கோடிக்கு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து, முதலமைச்சர் ரங்கசாமி உரையாற்றி வருகிறார்.

பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

விவசாய தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ₹2,000 வழங்கப்படும்.

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வரும் நிதியாண்டு முதல் இலவச அரிசியுடன், 2 கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்படும்.

பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 50 விழுக்காடு கொண்ட பசுக்கள் வழங்கப்படும்.

புதுச்சேரியில் உள்ள 2 அருங்காட்சியங்கள் மத்திய அரசின் உதவியுடன் புரணமைக்கப்படும்.

வனம் மற்றும் வனம் அல்லாத பகுதிகளில் 3- லட்சம் மரக்கன்றுகள் நடத்திட்டமிபட்டுள்ளது.

மரம் நடுவதை ஊக்கப்படுத்தும் வகையில் தொழில் நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் பொது மக்களுக்கு 1- லட்சம் மரக்கன்றுகள் வழங்கப்படும்.

பள்ளி மாணவர்களுக்கு
மதிய உணவு திட்டத்தில் வார இருமுறை வழங்கப்படும் சத்துணவுடன் கூடிய முட்டை இனி வாரத்தில் அனைத்து நாட்களிலும் வழங்கப்படும்.

6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி (இளநிலை கல்வி) படிக்கும் மாணவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மாதத்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.

முதியோர் உதவி பெறும் மீனவ பெண்கள் உயிரிழந்தால் வழங்கப்படும் ஈமச்சடங்கு தொகை ரூபாய் 15 ஆயிரத்தில் இருந்து ரூபாய் 20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு வரும் ஆண்டு முதல் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும்.

கிழக்கு கடற்கரை சாலையில் புதிதாக அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் வைக்கப்படும்.

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2 கோடியில் இருந்து 3 கோடியாக உயர்த்தப்படும்.

மத்திய சிறைச்சாலையில்
ஏழை சிறை கைதிகள் நலத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.இதன் மூலம் ஏழை கைதிகளுக்கு தேவைப்படும் சட்ட உதவி செய்யப்படும்.

புதுச்சேரியில் 21 வயது முதல் 55 வயது வரை உள்ள எந்தவிதமான உதவித்தொகையும் பெறாத குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ரூபாய் 1000 உதவித்தொகை, ரூபாய் 2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் – முதல்வர் ரங்கசாமி.